Tuesday, September 6, 2011

இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிறது ஜேவிபி.

மாற்றுக் கொள்கையுடைய பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை நாட்டில் அமல்படுத்துவதற்கு ஆட்சி மாற்றம் அவசியமானது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளையே தற்போதைய ஆட்சியாளர்களும் பின்பற்றுகின்றனர் எனவும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையிலான நாட்டுக்கு பொருத்தமுடைய பொருளாதார முறைமையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்:

1 comment:

  1. First of all JVP, should try to win the hearts of the people.once they finish the job,they may have the eligiblity to run alone a prosperous government.

    ReplyDelete