Tuesday, September 13, 2011

புலிகளின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட வேண்டுமென இந்தியா அறிவிப்பு.

புதுடில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு இந்திய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அறிவுறுத்தல் சகல பொலிஸ் பொறுப்பாளர்களுக்கும் உள்ளக பாதுகாப்பு செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழிழ விடுதலைப் புலிகள் மற்றும் பாபார் கல்சா எனப்படும் தீவிரவாத அமைப்பு ஆகியவை தொடர்பாக அதிகளவில் அவதானத்துடன் செயற்படவேண்டும். அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பை உரிய வகையில் பேணும் நோக்கில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் அண்மையில் இடமபெற்ற குண்டுத்தாக்குதல் குறித்து இந்திய அரசு புலிகள் மீது சந்தேகம் கொண்டுள்ளது. இந்நிலையிலேயே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இ;ந்திய அரசு தீhமானித்துள்ளது.

No comments:

Post a Comment