Tuesday, September 20, 2011

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு –திருமலையில் சம்பவம்

திருகோணமலை செல்வநாயகபுரம் பிள்ளையார் கோவில் வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது சடலமாக மீட்கப்பட்டவர் ஒன்பது மாதக்குழந்தையின் தாயாரான பாலசுந்தரம் புஸ்ப்பமலர் (வயது 28)என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பிய இவர் மாலை 5 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் யு.எல்.ஏ அஸ்கர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக பரிசோதனைக்காக சடலத்தை மாத்தளை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com