Wednesday, September 7, 2011

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சட்டத்தரணி கடத்தல்.

கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சட்டத்தரணி ஒருவர் இன்று (7)அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்தை , பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த கஸ்த்தூரி ஆராச்சி என்ற 58 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே கடத்திச் செல்லப்பட்டவராவார்.

கடத்திச் செல்லப்பட்ட சட்டத்தரணி கடந்த 3 ஆம் திகதி அவரது மனைவி மற்றும் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில்ஏழு பேரை கொண்ட குழுவினர் சட்டத்தரணியின் பாதுகாவலர்கள் இருவரை தாக்கிவிட்டு சட்டத்தரணியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment