நம்மட தமிழ் அரசயல்வாதிகள் எப்படி மக்களின்ட காதில பூ வை சுத்திறாங்க என்றத்தை இந்தப்படத்தில கொஞ்சம் பாருங்கோ, தேர்தல் ஒண்டு வந்திச்செண்டா கிள்ளுறான் நுள்ளுறான் என்று பொலிஸில முறைப்பாடு, ஜனாதிபதிக்கு பக்ஸ், கண்டன அறிக்கை என்று பெரிய அல்லோல கல்லோலம்.
கொஞ்ச நாளைக்கு முதல் இந்தப்படத்தில இருக்கிறவங்க ரெண்டுபேரைப் பற்றித்தான் ஊடகங்கள் முழுக்க செய்தி. செய்தி என்னனென்று மீட்டிப்பார்த்தால் யோகேஸ்வரனுக்கு பிள்ளையான் பிக்கப்பில் போகக்குள எட்டிப்பார்த்து கையைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்தாரம், கொல்லப்போறன் எண்டுவேற சொன்னாராம் என்றதான் செய்தி.
ஆனால் அது பகிரங்க அரசியல் பாருங்கோ. உள்வீட்டு அரசியல் எப்பிடி இருக்கென்று பாருங்கோவன். என்னவொரு அந்நியோன்யம்.
நளமகாராஜனின் ஆட்சியில் அன்னமும் பருந்தும் ஒருகூட்டில் வாழ்ந்த கதையை ஞாபகம் ஊட்டல.
காண்பது எல்லாம் உண்மையாக முடியாது
ReplyDeleteமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் பிள்ளையானுக்கு பக்கத்தில் இருப்பதை கண்டு இவர் வெளியில் சண்டை பிடிப்பவர்கள் குடும்பத்தில் உறவுகளை வளர்ப்பவர்கள் என்று செய்தி வெளியாகியுள்ளன. யோகேஸ்வரன் அப்படி உறவுமுறை கொண்டடுபவர் அல்ல இது பிள்ளையானின் திருவிளையாடல் தம்மை நல்லவர்கள் என்று மக்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். ஆலயத்தில் யார் பக்கத்தில் வந்து இருந்தாலும் அவ்விடத்தை விட்டுச் செல்லமாட்டார் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். எனவே பிள்ளையான் நல்லவன் என்று உணர்த்துவதற்காக அவரது ஆதரவாளர்கள் இவ்வாறான புகைப்படங்களை எடுத்து பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். எனவே தமிழ் மக்களே இவ்வாறான செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம் என்று பராளுமன்ற உறுப்பினர் திரு. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.