Wednesday, September 14, 2011

ஜெனீவா மாநாட்டுக்கு எதிராக வெளிநாட்டு புலிகளை தூண்ட ஜயலத் முயற்சியாம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பகா மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 18 ஆவது மாநாட்டின் போது புலி பயங்கரவாதிகளை இலங்கைக்கு எதிராக தூண்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் ஜயலத் ஜயவர்தனவுக்கு இது தொடர்பாக சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் முன்னணி தலைவரகளில் ஒருவராக இருந்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய ஒருவர் உயர்ந்தபட்ச உதவிகள் புரிந்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment