Monday, September 19, 2011

நந்திக்கடலில் கிரனேட் வெடித்ததில் இளைஞன் படுகாயம்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவால் நந்திக்கடல் களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் அங்கு ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் வலையில் கைக்குண்டொன்று அகப்பட்டு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com