Wednesday, September 14, 2011

வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது

20 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக நாடுகடத்த முயற்சித்த நபர் ஒருவர் நேற்றிரவு 11.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் டொலர்கள், யூரோக்கள், குவைத் தினார் ,ஜப்பான் யென் என்பன அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு விமானம் மூலமாக செல்ல இருந்த போது கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் குறித்த நாணயத்தாள்களை விமான நிலையத்திற்கு ஒப்படைக்க வேண்டிய பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment