Friday, September 9, 2011

தேர்தல் பிரசாரத்தினால் அழுக்கடைந்த வீதி

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலையிட்டு நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான பிரசார வேலைகள் ஏட்டிக்குப் போட்டியாக நடைபெற ஆரம்பித்துள்ளன. நகரெங்கும் பொது இடங்களிலும் வீடுகளின் மதில்களிலும் கடைகளின் சுவர்களிலும் சட்டவிரேதமான முறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொது மக்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது. இதன் போது சில இடங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இந்த வாகனப் பேரணயின் போது நீர்கொழும்பு கிறீன்பார்க் முன்பாக பெரும் எண்ணிக்கையில் பட்டாசு கொளுத்தப்பட்டது. இதன் காரணமாக பட்டாசுக் கழிவுகளால் வீதி அலங்கோலமானது. அந்தக் காட்சியையே படத்தில் காண்கிறீர்கள்.



No comments:

Post a Comment