Thursday, September 15, 2011

பிரித்தானிய பாராழுமன்றத்தில் இலங்கை மனித உரிமை மீறல் பற்றிய விவாதம்.

பிரித்தானிய பாராழுமன்றத்தில் இலங்கை மனித உரிமை மீறல் பற்றிய விவாதம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறும் கால கட்டத்தில், பிரித்தானிய பாராழுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமை பற்றிய விவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலம் ஒதக்கப்பட்டுள்ளது.

மேற்படி விவாதத்திற்கு வலுச்சேர்கும் வகையில் பிரிதானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவலக்களை வழங்குமாறு புலம்பெயர் தேசத்திலுள்ள புலி உறுப்பினர்கள் தமிழ் மக்களை கேட்டிருந்தனர். ஆனால் மக்கள் புலிகளின் வேண்டுதலை செவிமடுத்து சாத்தியமான எவ்வித சமிக்கைளும் வெளிப்படுத்தவில்லை எனவும் புலிகள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment