Tuesday, September 20, 2011

என்னுடைய அமைச்சுக்கு மூடுவிழா மிக விரைவில் என்கிறார் கருணா.

மீள்குடியேற்றப் பணிகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து தனது அமைச்சு விரைவில் மூடப்படவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மீள் குடியேற்ற அமைச்சு மூடப்படவுள்ளதாக அமைச்சர் முரளிதரனிடம் ஊடகம் ஒன்றினை கேட்டபோது இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ள அவர் அடுத்து அவருக்கு ஒரு அமைச்சு கிடைக்குமா என்ற கேள்விக்கு அதற்கான பதில் தன்னிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்றப்பணிக்கள் 90 வீதம் முடிவடைந்த நிலையில் ஏனைய பணிகள் மாவட்ட அரச அதிபர்களிடம் கையளிக்கப்பட்டும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment