Monday, September 19, 2011

கணவனால் தாக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் பலி! மதவாச்சியில் சம்பவம்

கணவனால் தாக்கப்பட்ட இரு பிள்ளைகளின் இளம் தாய் பரிதாபகரமாக பலியான சம்பவம் மதவாச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவத்தில் மதவாச்சி தாம்புவௌ பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளம் தாயான ஜோசப் இசாராசிசுமினி என்பவரே பலியாகியுள்ளதுடன் பலியானவரின் சிற்றன்னையும் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் மாலை வேளையில் குறித்த கணவன் மனைவியிடையெ தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு உச்சக்கட்டத்தை அடையவே கணவன் உலக்கையால் மனைவியை தாக்கியுள்ளார். அதன்போதே அந்தமனைவி பலியாகியுள்ளார். தகராறு இடம்பெற்றபோது அதனை தடுக்க சென்ற பலியானவரின் சிறிய தாயாரும் காயமடைந்ததுடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பலியானவரின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளதுடன் சந்தேகநபரை கைது செய்துள்ள மதவாச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment