Wednesday, September 14, 2011

மகளீர் மாத்திரம் பஸ்சேவை

பெண்களுக்கு மட்டுமான பஸ் சேவை (மகளிர் பஸ்) ஒன்று நேற்றுக்காலை நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. நீர்கொழும்பு – புறக்கோட்டை 240 ஆம் இலக்க போக்குவரத்து வீதியில் காரியாலய நேரத்தில மட்டும் இந்த சேவை இடம் பெறும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொட்டாவ- புறக்கோட்டை , மொரட்டுவ - புறக்கோட்டை ஆகிய வீதிகளில் பெண்களுக்கு மட்டும் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை , எதிர் வரும் 20 ஆம் திகதி கம்பஹா - புறக்கோட்டை போக்குவரத்து வீதியில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com