Sunday, September 11, 2011

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வெளிநாட்டு தூதுவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் மேலைத்தேய நாடுகள் சிலவற்றின் தூதரக அதிகாரிகளுடன் ரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பு ராஜதந்திர வட்டாரங்களினுடாக அறியமுடிகின்றது. இந்த பேச்சுவார்த்தை அத்தனகல்லயில் உள்ள அவரின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அங்கு பணியாற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர் எனவும் அங்கு பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் தெரியவில்லை எனவும் மற்றைய நாட்கள் போல் அன்றி கடும் பாதுகாப்புடன் இந்த பேச்சுவார்த்தை இடம் பெற்றதாகவும் அறியமுடிகின்றது.

1 comment:

  1. Respected Madam would have done something during her long regime.We think that she is showing herself up for the cocky in Srilankan politics

    ReplyDelete