Wednesday, September 14, 2011

5 இலங்கையர்களுக்கு எதிரான விசாரணை நாளை நெதர்லாந்தில்..

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என்றும் அவர்களுக்கென நிதி சேகரித்தனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து இலங்கையர்களுக்கு எதிரான வழக்கு நாளை நெதர்லாந்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது. ஒப்ரேஷன் கொனிக் என்ற திட்டத்தின் கீழ் நெதர்லாந்து பொலிஸார் தமிழர்கர்களின் சந்திப்புகளை கவனத்தில் கொண்டு குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஐவரும் நாளைய தினம் தெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள போரக்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஐவருள் ஒருவரான ஆர்.ஸ்ரீரங்கம் என்பவரின் சட்டத்தரணி விக்டர் கோப், ஐரோப்பிய நீதிமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றிய தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment