Tuesday, September 13, 2011

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள்

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 திகதி நடந்து முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை பத்தரமுல்லை கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை அறிவித்தார்.

முதல் தடவையாக 20 நாட்களில் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளை நிறைவு செய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடார்.

இதேவேளை, தரம் எட்டு மாணவர்களுக்கு புதிய பரீட்சை ஒன்றை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment