Tuesday, September 20, 2011

மொனராகலை - யாழ்ப்பாணம் பஸ்சில் சீ4 ரக வெடிபொருள் மீட்பு

மொனராகலையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் சீ4 ரக வெடிகுண்டு காணப்பட்டதை அடுத்து பஸ்சின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை சோதனைச் சாவடியில் பஸ் சோதனை செய்யப்பட்ட போது சாரதியின் ஆசனத்துக்கு அருகேயிருந்து 615 கிராம் எடை கொண்ட சீ4 ரக வெடி பொருள் மீட்கப்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடி பொருள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவை பாவனைக்கு உதவாதவை என தெரியவந்துள்ளது. அத்துடன் இரு பஸ் உரிமையாளர்களிடையேயான போட்டி மற்றும் குரோதம் காரணமாக திட்டமிட்டவகையில் குறிப்பிட்ட பஸ்சினுள் வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின்போது வெளிவந்துள்ளது.

குறிப்பிட்ட பஸ்வண்டி பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதாகும். இதில் சாரதியாக தமிழர் ஒருவரும் நடாத்துனராக சிங்களவர் ஒருவரும் கடமை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com