Friday, September 16, 2011

கொழும்பில் 33 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் - மிலிந்த மொரகொட

கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 33 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொட தெரிவித்தார். மக்களுக்கு ஸ்திரமான மற்றும் நீண்ட கால தீர்வை வழங்க வேண்டியதே அரசாங்கத்தின் தேவையாக உள்ளது. மக்கள் வசிக்கக் கூடிய குடிசை வீடுகளை அகற்றி தொடர் மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் வாழ்க்கையை பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு இன, மத, சமய பேதங்கள் இன்றி சகரும் உதவி புரிய வேண்டும் என்று மிலிந்த மொரகொட மக்களைக் கேட்டுக் கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com