Wednesday, September 14, 2011

மின்னல் தாக்கி 30 பேர் மரணம்

இந்த வருடத்தில் இது வரையில் மின்னல் தாக்கியதன் காரணமாக 30பேர் மரணமாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதன் காரணமாக 34 பேர் மரணமடைந்ததாகவும் 300 மில்லியன் ரூபா வரையிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இடர் முகாமைத்துவ அமைச்சில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மின்னல் தாக்கதல் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது எனவும் ஊடகங்கள் ஊடாக மின்னல் தாக்கம் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கி வருகின்ற போதும், அந்த வசதிகள் இல்லாத கஷ்டப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் அமரவீர அங்கு மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment