Tuesday, September 20, 2011

அரசாங்க துறைகளில் தினமும் சுமார் 25 முறைப்பாடுகள்

அரசாங்க துறைகளில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பாக தினமும் சுமார் 25 முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக் குழுவின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான ஜகத் பாலபட்டபந்தி தெரிவித்துள்ளார்.

கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்த்துடன். ஆணைக்குழு இயங்காது இருந்த காலத்தில் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் ஆணைக்குழு மீண்டும் இயங்க ஆரம்பித்த கடந்த மே மாதம் 15 ஆம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஆணைக்குழுவை 1954 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment