ராஜீவ் காந்தி பெயரில் சுவிஸ் வங்கியில் பலகோடிரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் நாராயணா புகார் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் குண்ரூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யுனிஸ்ட் சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது, இதில் கலந்தகொண்டு அவர்பேசுகையில் இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கியில் போட்டுவைத்துள்ளனர்.
அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9இலட்சம் கோடி கறுப்புப் பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றாக தெரியும் இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார். சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்த செல்லுங்கள என்று கூறின ஆனால் அதை வாங்க காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது.
அப்படியானால் சுவிஸ் வங்கிகளில் உள்ள பெரும்பாலான கறுப்புப்பணத்தை காங்கிரஸ் கட்சி தலைவாகள்தான் போட்டு வைத்துள்ளார்களா? அந்த கறுப்பு பணத்தை எடுத்து வந்து ஏராளமான தொழிற்சாலைகள் தொடக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாமே. இதன்மூலம் தனிநபர் வருமானம் அதிகரிக்கும் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும என்றார்.
No comments:
Post a Comment