Wednesday, September 21, 2011

நடைபாதை வியாபாரிகளுக்கு 1600 நிரந்தர விற்பனைக் கூடங்கள்

புறக்கோட்டை அரச மரத்தடி,நுகேகொடை நகரம்,கொழும்பு தேசிய வைத்தியசாலை, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு வீதி, குணசிங்கபுரம் ஆகிய இடங்களில் நடை பாதைகளில் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நிரந்தர வியாபார கூடங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 1600 நடைபாதை விற்பனைக் கூடங்கள் நிர்மானித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து கட்டங்களாக இவை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 3200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இத் திட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com