Monday, November 1, 2010

அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக ஜேவிபி வீதிக்கு இறங்குகின்றது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து மக்களைத் தெளிவுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒருகட்டமாக இன்று துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மெனிங் சந்தைப் பகுதியில் இன்று இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. அதில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com