![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibIKmc-Qk49jKNQVSyGH_VXnz3FG-uEYMXWp97JN_tNNDUw3i6Ls2fak9YmIsmwVf3mWgxhgRjLrZyYx_XTQ3eMpr-e12PXwe_rHvG6wpaBe5YcexhlQxZcYImhWZ0UrkXWFBgtpuF0qE/s200/ranil.jpg)
பாராளுமன்ற மற்றும் நாட்டு அரசியல் நியமனங்கள் உட்பட பல முக்கிய விடயங்களை கையாளவுள்ள இப்பேரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக கலந்து கொள்ள மறுப்பதானது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மிக முக்கியமான விடயங்களிலிருந்து சறுக்கிச் சென்று வெற்றுக்கோஷமிடவே தகுதியானவர்கள் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. நியாயபூர்வமான விடயங்களை நேருக்கு நேர் நின்று பொறுப்புணர்சியுடன் விவாதிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாரில்லை என்பதையும் , தமிழ் மக்களுக்கு வீராவேஷ வார்த்தைகளை பேசி அவலங்களின் மீது நின்று அரசியல்புரியவே விரும்புகின்றனர் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நரித்தனமான அரசியல் தன்மையை உணர்ந்த ரணில் பாரளுமன்ற பேரவைக்கு த.தே.கூட்டமைப்பின் சுபத்திரனை நியமித்தபோது , அதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தன் ஊடாக இவர்களின் கபடத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
இதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்பார்வைக்கு அரசினை எதிர்கின்றனரே தவிர உளப்பூர்வமாக அவர்கள் அதை செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.
கூத்தமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்தலாம் என்று யோசிப்பது முட்டாள் தனம்,
ReplyDeleteகாலத்தையும், சந்தர்ப்பங்களையும் வீணடிக்காமல்,
யதார்த்தங்களை, சூழ்நிலைகளை, உண்மைகளை புறிந்துகொண்டு
ஆக்கபூர்வமான, பிரயோசனமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும்.
சுயனல அரசியலுக்காக ஒட்டு மொத்த தமிழினத்தை மீண்டும் பாதாளத்தை நோக்கி நகர்த்தாமல்,
மரியாதையாக அரசியலிலிருந்து விட்டு விலகி, செயதிறனுள்ள, சேவை மனப்பான்மையுள்ள புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
கோடி புண்ணியம் கிடைக்கும்.
நன்றி,