Wednesday, September 22, 2010

முஸ்லிம் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள் நினைவு கூரப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முஸ்லிம் ஆயுதக்குழுவால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட 17 அப்பாவி தமிழ் மக்கள் நேற்று உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டனர். மதவாத முஸ்லிம் ஆயுதக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்ட இப்பொது மக்களின் நினைவாக புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் நினைவுதூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30மணியளவில் நினைவுதூபி அருகில் ஒன்றுகூடிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

இந்நிகழ்வை முன்னிட்டு பிரதான வீதிகளிலும் உள்வீதிகளிலும் வெள்ளை,கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நினைவுதின நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தை நினைவுகூறும் நிகழ்வை எந்தவொரு இனமும் தங்களுக்கு எதிரான நிகழ்வாகவோ, செயலாகவோ கருதக்கூடாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment