Friday, September 17, 2010

மன்னார் மாணவர்களுக்கான கடற்படையினரின் றம்பேர்ட் பயிற்சி நிறைவு.

மன்னார் கல்விவலயத்திற்குட்பட்ட 20 பாடசாலைகளின் தெரிவுசெய்யப்பட்ட 90 மாணவர்களுக்கான 20 நாள் றம்பேட் பயிற்சி வகுப்புக்கள் மன்னார் வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றுவந்தது. இவர்களுக்கான பயிற்சிகளை கடற்படையினர் வழங்கி வந்தனர்.

பயிற்சிகளின் நிறைவுநாளான இன்று 20 பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் றம்பற் வாத்தியக்கச்சேரி நிகழ்த்தப்பட்டு பயிற்சிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் றிசார்ட் பதுயுதீன் வழங்கி வைத்தார். சிறப்பாக தேர்ச்சி பெற்ற 3 மாணவர்களுக்கு சிறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியளித்த கடற்படையினர் இம்மாணவர்கட்கு பரிசுப்பொதிகள் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், மன்னார் அரசாங்க அதிபர், தள்ளாடி பிரிகேடியர் மைத்திரி, டயஸ், கடற்படை உயர்அதிகாரி மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் கல்விப்பணிப்பாளர் இன்னும் ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment