Sunday, September 5, 2010

மகிந்தவின் ஆட்சி தொடர்பாக பேசினால் என்னை தேடியும் வெள்ளைவேன் வரும்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி மட்டுமல்ல முழுமையாக ஜனநாயக மீறல் ஆகும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க இன்றைய ஆட்சி தொடர்பாக நான் பேச விரும்பவில்லை எனவும் அதற்கு அப்பால் பேசினால் எனக்கும் வெள்ளை வேன் அனுப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையும் அடங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என தெரிவித்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ் இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் எனக்கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி ஒருவர் இரு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற வரையறை நீக்கப்படும் நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது, தான் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல என சந்திரிகா பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment