Wednesday, September 15, 2010

பிரபாகரன் இறந்ததாக கூறப்படும் இடத்தில் நாமலுடன் சிறி ரங்கா.

வன்னிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் பிரபாகரன் இறந்ததாக அரசாங்கம் தெரிவிக்கும் நந்திக்கடல் பிரதேச்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசின் பக்கம் தாவியுள்ள சிறிரங்காவும் சென்றுள்ளார். புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்திவந்த சிறிரங்கா கடந்த காலங்களில் அரசுடன் இணைந்திருந்த தமிழ் அரசியல் கட்சிகளை விமர்சித்து வந்தவர். இன்று அதே பாதையில் அவர் பயணிப்பதையிட்டு மக்கள் பெரிதும் விசனம் கொண்டுள்ளனர்.



No comments:

Post a Comment