Thursday, September 9, 2010

சண் சீ கப்பலில் புலிகள் சார்பாக வெளிநாட்டு பிரயாணங்களை மேற்கொண்டு பிரதிநிதியும்.

கனடாவைச் சென்றடைந்துள்ள எம்.வி.சன்.சீ கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்ட நபர் ஒருவரும் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இது தொடர்பில் அவர் கருத்து கூறவில்லை. இருந்தும் பின்னர் அவர் அதனை ஒப்புக் கொண்டுள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினருடன் கடந்த காலங்களில் 12 நாடுகளுக்கு பயணித்து இருந்த இவர் ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சுனாமி நிவாரண நிதி கோரி வெளிநாடுகளுக்கு பயணித்து இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஆறு பேருடன் இவரும் கூடவே சென்றிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் சுதந்திர ஊடகவியலாளராகவே அப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும் அதற்காக அவர் புலிகளின் உயர் மட்டக் குழுவைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவரை பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தொடர்ந்தும் தடுத்து வைக்க கனடா தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment