Wednesday, September 22, 2010

பொலிஸார் நீதிவிரோத படுகொலைகளைச் செய்கின்றனர். நீதிமன்றில் சட்டத்தரணி.

எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த கீனா என அழைக்கப்படும் அஜித் பிரசன்னவின் (வயது 32) கொலை தொடர்பான வழக்கில் ஆஜரான சட்டத்தரணி சத்திய வெல்லப்பிலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இருகொலைகளுக்கான சந்தேசத்தின் பேரில் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தன்னிடமுள்ள ஆயுதங்களை காட்டுவதாக அழைத்துச் செல்கையில் பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது ஆஜராகிய சட்டத்தரணி , சந்தேக நபரின் இருகைகளுக்கும் முதுகுக்குப் பின்புறமாக விலங்கிட்டு அவரின் வீட்டுக்கு அழைக்துச் சென்ற பொலிஸார் மரணமானவரின் தாயாரிடம் இதுவே நீ உமது மகனை பார்வையிடும் இறுதி தடவையாக அமையப்போகின்றது, விரும்பினால் அவருக்கு ஏதாவது உணவளிக்கமுடியும் என தெரிவித்ததாகவும் , அத்துடன் அவரின் 3 வயது மகனிடம் இதுவே நீ உனது தந்தையுடன் பேசும் இறுதி தடவையாக அமையப்போகின்றது என தெரிவித்ததாகவும் மன்றில் தெரிவித்துள்ளதுடன் நாட்டில் இவ்வாறான சட்டவிரோத கொலைகள் தொடர்ந்த வண்ணமுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment