Monday, September 6, 2010

அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான கொழும்பு பல்கலைக்கழக கருத்தரங்கு ரத்து.

அரசியல் யாப்பின் 18ம் திருத்தச்சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கவென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உயர்மட்டத்தினராலேயே இத்தடை விதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இக்கருத்தரங்கில் பிரதான பேச்சாளராக ஜனநாகயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ளவிருந்துள்ளார். இக்கருத்தரங்குக்காக பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபம் பல நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் மண்டபம் தரமுடியாது என பல்கலைக்கழக உயர் மட்டம் கையை விரித்துள்ளது.

No comments:

Post a Comment