Thursday, September 16, 2010

ஜோர்டானில் பயங்கரவாதிகள் தாக்கலாம் . அமெரிக்கா எச்சரிக்கை

ஜோர்டான் நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதால் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜோர்டானில் உள்ள துறைமுக நகரமான அகாபா ஏராளமான அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகும். இந்நிலையில் இந்த நகரில் வெளிநாட்டினர், குறிப்பாக அமெரிக்கர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த தகவலக்ள் தெரிவிக்கின்றன என்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனால் இரண்டு நாட்களுக்கு அகாபா பக்கம் அமெரிக்கர்கள் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கத் தூதரகத்தின் இந்த எச்சரிக்கையை ஜோர்டான் அமைச்சர் அலி அல் அயத் நிராகரித்துள்ளார். தீவிரவாதிகள் அபாயம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment