Tuesday, September 7, 2010

அரசியல் யாப்பு சீர்திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவர் இருமுறைகளே பதவி வகிக்கமுடியும் என இலங்கை அரசியல் யாப்பின் 18ம் திருத்தச்சட்டத்திலுள்ள வரையறையை நீக்கும் பொருட்டு அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுடனான உத்தேச அரசியல் யாப்பு .சீர்திருத்த சட்ட மூலம் பாராளுமன்றில் சற்று முன்னர் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் டி,எம்.ஜயரட்னவினால் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் முன்னிலையில் யாப்பு சிர்திருத்தச் சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தத்தின் மீதான விவாதம் இடம்பெற்று நாளை சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சட்ட மூலம் சபையில் சமர்பிக்கப்பட்ட போது எதிர்கட்சிகள் தமது பலத்த எதிர்ப்பை காட்டி , அக்கோவை சபாநாயகருக்கு கையளிக்க முடியாதவாறு பல இடையூறுகளை விளைவித்தபோது , யாப்பு சீர்திருத்தம் அரசியல் அமைப்புக்கும், நீதிமன்ற தீர்ப்புக்கும் உட்பட்டமையால் அதில் பிரச்சினை எதுவும் கிடையாதென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment