Tuesday, September 21, 2010

பிரிட்டிஷ் படையினர் ஆப்கானை விட்டு வெளியேறுகின்றனர்,

காபூல் ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாநிலத்தில் உள்ள சாங்கின் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் படையினர் அந்தப் பொறுப்பை அமெரிக்கப் படையினரிடம் ஒப்படைத்துளளனர். இதனால் பிரிட்டிஷ் வீரர்கள் அங்கிருந்து வெளியேறவுள்ளனர்.

பிரிட்டிஷ் வீரர்கள் ஆப்கானிஸ் தானுக்கு அனுப்பப்பட்டது முதல் பெரிய அளவில் இழப்பை சந்தித்திருக்கின்றனர். 2001-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் இதுவரை பிரிட்டிஷ் வீரர்கள் 337 பேர் கொல்லப்பட்டனர்.

பிரிட்டிஷ் வீரர்க்ள இதுவரை ஆப்கானிஸ் தானில் ஆற்றியுள்ள அரும் பணிகள் பாராட்டுதலுக்கு உரியவை என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சாங்கின் பகுதி அடிக்கடி தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கக்கூடிய இடம்.

பிரிட்டிஷ் வீரர்கள் 2006-ம் ஆண்டு முதல் அங்கு பாது காப்புப் பணியில் ஈடு பட்டிருந்தனர். இங்கு மட்டும் பிரிட்டிஷ் வீரர்கள் 106 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் கூறியது.

No comments:

Post a Comment