Tuesday, September 7, 2010

தனுன குறித்து சர்வதேச பொலிஸார் அபாய அறிக்கை.

ஹய்கோப் நிதி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபரான தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள பிடியாணை குறித்து சர்வதேச பொலிஸாருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிஸார் நீதிபதியூடாக இதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் செயற்படும் தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச பொலிஸாரினால் அபாய அறிக்கை விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment