Friday, September 3, 2010

மருதனார்மடம் காங்கேசன்துறை விதியில் விபத்து.

நேற்று இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் காங்கேசன்துறை விதி, றொட்டி ஆலடிச்சந்தியில் மோட்டார் சையிக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றது.

வாகனத்தை விலத்த முற்பட்டவேளையில் எதிரே வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயங்களுக்கு உள்ளாகியதுடன் வாகனமும் மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்துள்ளது. சுன்னாகம் பொலிசார் விசாரனைகளை மேற்கொள்வதுடன் விபத்துக்கு உள்ளாகிய வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்க்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment