Monday, September 6, 2010

படைவீரர்களுக்கான 27 வீடுகளை ஜனாதிபதி கையளித்தார்.

நமக்காக நாம் திட்டத்தினூடாக கட்டப்பட்ட மேலும் 27 வீடுகளை இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்வீரர் குடும்பங்களுக்கு கையளித்தார். குருநாகல் மாவட்டத்திலுள்ள தொரயய எனுமிடத்தில் கட்டப்பட்ட இவ்வீடுகள் யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் விதவைகள் , காயமடைந்து அங்கவீனர்களானோர் , மற்றும் வீடுகளற்ற படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தின் முதலாவது திறப்பு 2007ம் ஆண்டு புலிகளுடனான சண்டையின்போது உயிரிழந்த கடற்படை அதிகாரி ரிஎம்ஆர்கே . தென்னக்கோணின் மனைவிக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

நமக்காக நாம் திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட 25 வீடுகள் கடந்த ஜூலை மாதம் 11ம் திகதி கண்டியில் செனரத்கம எனுமிடத்தில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியின் பெரும்பகுதி வெளிநாடுகளில் வாழும் பெரும்பாண்மையின மக்களினால் நன்கொடையாக வழங்கப்படுகின்றது. இப்பணத்தினை கொண்டு பொருட்கள் வாங்கப்படுவதுடன் , இராணுவத்தினரே கட்டிட வேலைகளை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தினூடாக 50000 வீடுகள் கட்டப்படவுள்ளது.










No comments:

Post a Comment