Tuesday, September 7, 2010

பாக்.கில் காவல் நிலையம் மீது தற்கொலை தாக்குதல்: 19 பேர் பலி

வட மேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானின் லக்கி மார்வத் டவுனில் உள்ள காவல் நிலையம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் காவல் நிலையம், அருகில் உள்ள மசூதி, அரசு அலுவலகங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் சம்பவத்தில் 19 காவலர்கள் பலியாகியுமுள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com