Wednesday, September 22, 2010

18 ஆவது சட்ட திருத்தத்திற்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் குற்றச்சாட்டு.

இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது சட்ட திருத்தம் ஜனநாயக விரோதமானதென ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையில் குற்றச்சாற்று சுமத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், அயர்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் 18 ஆவது சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இதேவேளை, 18 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் ஜனநாயக விரோத விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை சட்ட அமைச்சர் மொஹான் பீரிஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய போது, எட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும், சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் பேரவையில் ஆஜராகியிருந்ததாகத் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment