Sunday, August 15, 2010

கிரனேட்டுடன் விளையாடிய இரு குழந்தைகள் காயம்.

மொனறாகலை , அலியாவத்தை எனுமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8 , 9 வயதுடைய இரு குழந்தைகள் அங்கே காணப்பட்ட கிரனேட் ஒன்றினை கண்டுள்ளனர். அது ஒரு விளையாட்டு பொருள் என நினைத்து கையிலெடுத்த அவர்கள் அதன் கிளிப்பை உருவியுள்ளனர், அப்போது சத்தமொன்று வருவதை உணர்ந்த அவர்கள் அதை பலமாக வீசி எறிந்துள்ளனர் என தெரிவித்துள்ள மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அநே நேரம் ரத்தினபுரி பிரதேசத்தில் இரும்பு குழாய்கள் கொண்டு ரம்புட்டான் பழம் புடுங்க முற்பட்ட 10 , 11 வயதுடைய சகோதரர்கள் மின்தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment