Thursday, August 26, 2010

சீஐடி வேஷம் போட்டு தமிழரிடம் பணம் பறித்த இருவர் கைது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் என அறிமுகம் செய்து தமிழ் மக்களிடம் பணம் , நகைகளை பெற்றுவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸைப் பிரதேசத்திலுள்ள ஒருவரிடம் இவ்வாறு பணம் பெற்றபோதே இவர்களின் வேஷம் கலைந்துள்ளது. குறிப்பிட்ட நபரை நெருங்கிய இவர்கள், நீர் பயங்கரவாக குழுக்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. தங்களை கைது செய்து நீண்டநாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அத்துடன் இதற்கு மாற்றீடாக பணம் , நகை என்பவற்றையும் வேண்டியுள்ளனர். பயத்தில் அவற்றை கொடுத்த நபர் இது தொடர்பாக நண்பர்களிடம் தெரிவித்தபோது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு போலி சீஐடி க்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடவத்தை , மருதானை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com