Wednesday, August 11, 2010

சிறையில் கைதிகள் மோதல் : ஒருவர் பலி

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே இன்று காலை இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் பலியானதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார். விளக்கமறியல் கைதியொருவர் மற்றொரு கைதியை கொக்கியொன்றினால் குத்த முற்பட்டபோதே மோதல் மூண்டதாகவும் ஆனால் இரு தரப்பினருக்கிடையிலும் நீண்ட காலமாக பகை நிலவியதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலை தடுக்க கைதியொருவர் குத்தப்பட்டு காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment