Friday, August 27, 2010

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் மாயம். மேயர் சிவகீதா கொழும்பு ஓட்டலில் தூக்கம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிக்க உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என அழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் மாநகர சபை அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கெடுத்துவிட்டுச் சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி அததெரணவிற்கு தெரிவிக்கையில் 'வீட்டில் தொலைக்காட்சி பார்த்து விட்டு மாலை 4.30 மணியளவில் காரியாலயத்தில் சந்திப்பொன்று இருப்பதாக ஆயத்தமாகி சென்றார். மாலை 5.30 மணியளவில் பத்மினி அக்காவிடம் (சிவகீதா பிரபாகரன்) சந்திப்பு முடிவடைந்துள்ளது. பின்பு மாலை 7.30 மணியளவில் மீன் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மச்சான் அவரைக் கண்டுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பும் வேளையிலேயே அவரிற்கு ஏதாவது நேந்திருக்கும் என எண்ணுகிறேன்' எனக் கூறியுள்ளார்.

வடகிழக்கல் கடத்தல் காணமல்போதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படும் இச்சந்தர்ப்த்தில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பான கருத்தினை பெற்றுக்கொள்ளும்பொருட்டு மட்டு மேயர் சிவதீதா பிரபாகரனை நாம் நேற்றிரவு தொடர்பு கொண்டபோது தான் கொழும்பு செல்வதாகவும் , கொழும்பு கோட்டல் ஒன்றில் படுத்துறங்கப்போகின்றேன் நாளை தொடர்பு கொள்ளுங்கள் என்றார். இச்செய்தி பிரசுரமாகும்வரை அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைப்பை ஏற்படுத்தியபோதும் பதில் இல்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com