Friday, August 27, 2010

வைத்தியர் தூக்கில் தொங்கி தற்கொலை. பொலிஸாரின் சூட்டில் ஒருவர் பலி.

அல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்பிரதேசத்தில் வைத்தியராக கடமையாற்றி வந்த 52 வயதுடைய பந்துள மகிந்த ஜெயலத் எனப்படும் இவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை புலனாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் அல்பிட்டியை அண்டிய பிட்டிகல எனும் பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். குறிப்பிட்ட நபர் பல குற்றச்செயல்களுக்காக தேடப்பட்டுவந்தவர் என தெரிவிக்கும் பொலிஸார் , சந்தேக நபரை கைது செய்ய சென்றபோது அவர் பொலிஸார் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டபோது துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment