Friday, August 27, 2010

கொலைக்குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு ?

ரத்தினபுர மகாசமன் தேவாயலத்தின் முன்னாள் பூசாரியான கொலைக்குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது. தனது முன்னாள் மனைவியை கொன்றமைக்காக கடந்த 2007ம் ஆண்டு ஆயட்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட குற்றவாளி நேற்று ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகராங்களுள் நீதிமன்றினால் தண்டிக்கபட்ட குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தினூடாக இரு நபர்களை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோவின் மனைவி ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

No comments:

Post a Comment