Monday, August 23, 2010

தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் நேருகுணா மீது புலிகளின் மக்களவை தாக்குதல்.

புலிகளிடையேயான உள்வீட்டு மோதல்கள் கனடாவில் உக்கிரமடைந்து வருவதுடன் அண்மையில் கைகலப்பு சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டபின்னர் புலிகளின் காட்டிக்கொடுப்புக்கள் தொடர்பாக மக்கள் அறிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சொத்துப்பிரிக்புக்களில் அடிதடிகளும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது.

புலிகளின் ஆஸ்தான அரசியல் ஆய்வாளராக செயல்பட்டுவந்த நேரு குணா என்பவர் மீது மக்களவை என்ற போலித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படும் சில உறுப்பினர்கள் தாக்குதல் நாடாதியுள்ளனர். இவர்களால் பலமாக தாக்கப்பட்டுள்ள நேரு குணாவின் கை முறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அண்மையில் தாய்லாந்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரட்டிஸ் கொலம்பியா மாநிலத்தை வந்தடைந்த அகதிகளிற்கு உதவும் நடவடிக்கையில் தமிழ் காங்கிரஸ் என்ற புலிகளின் உப அமைப்பாக செயற்பட்டுவரும் பிறிதொரு அமைப்பினர் உதவி வருவதுடன், அந்த
மக்களிற்கு என்று கூறி நிதி சேகரிக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்ற நிலையிலேயே தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அகதிகளாக வந்த மக்களிற்கு உதவக்கூடாது என்று கூறி, மக்களவை உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் ஏகபிரதிநிதித்துவ மோகம் அகதிகளுக்கு உதவுவதிலும் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்ற கோட்பாட்டிலேயே குணா என்பவர் காயமடைந்துள்ளார்.

1 comment:

  1. வன்னயில் வாழ்விழந்து வறுமையில் அல்லல்படும் உண்மையான தமிழ் அகதிகளுக்கு, இதுவரைக்கும் ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை.

    ஆனால் வசதியான அகதிகளுக்கு, அகதி என்று வருபவர்களுக்கு அதுவும் கனடாவில் உதவி செய்வதக்கு போட்டிகள்.

    ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள் தான் இதுகள், எந்த ஜென்மத்திலும் திருந்தப் போவதில்லை.

    இந்த கனடா தமிழ் பரதேசிகளை எப்படி மனித வட்டதிக்குள் எடுக்கமுடியும்?.

    ReplyDelete