Saturday, August 28, 2010

பாக்கிஸ்த்தானில் அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

பாக்கிஸ்தான் பெஷாவரில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை தூதரகத்தை சூழ்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ராணுவத்தினரும் போலீசாரும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.

தூதரகத்தின் அருகே உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவு அலுவலகமும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

No comments:

Post a Comment