Sunday, August 22, 2010

நிந்தவூர் முருகன் ஆலயம் தாக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் திருமுருகன் ஆலயம் நேற்றிரவு தாக்கியழிக்கப்பட்டுள்ளது. 1990 ஆண்டு வன்முறையின் பின்னர் ஏற்றபட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இயங்காமல் இருந்த இவ்வாலயம் மீண்டும் ஆரம்பமானதை தொடர்ந்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலை நிந்தவூர் முஸ்லிம்களே மேற்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்தை தாக்கியழித்த குழுவினர் சுவரொட்டி ஒன்றினை ஒட்டியுள்ளனர். அச்சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் அது முஸ்லிம்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

இன்றுகாலை ஆலயத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.




No comments:

Post a Comment