Monday, August 16, 2010

அக்கரைப்பற்று விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவாடி பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்து சம்பவத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் அக்கரைப்பற்று - சாகாம வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் சாகாமத்தை சேர்ந்த கே.யோகநாதன் என்ற சமுர்த்தி உத்தியோகத்தரே உயிரிழந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரும் அவரின் மைத்துனரும் சாகாமத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாகவந்த உழவு இயந்திரத்தில் மோதுண்டபோது சமுர்த்தி உத்தியோகத்தர் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சமுர்த்தி உத்தியோகத்தரின் மைத்துனர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்த பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதி தலை மறைவாகியுள்ளதாகவும் அவரை தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனையை தொடர்ந்து இன்று காலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment