Saturday, July 3, 2010

புழல் சிறைக்கு நளினி மாற்றப்பட்டது ஏன்- சிறைத்துறை தலைவ‌ர் ‌விள‌க்க‌ம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி புழல் சிறைக்கு மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து கூடுதல் காவல்துறை இயக்குநரும், சிறைத் துறை தலைவருமான கே.ஆர். ஷியாம் சுந்தர் விளக்கம் அளித்து‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவர், தமிழக சிறைகளில் கைதிகளிடமிருந்து கடந்த ஆண்டு 250 செல்போன்கள், 150 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. கைதிகளைப் பார்க்க வருபவர்கள் எடுத்துவரும் பொருள்களுக்கிடையே மறைத்து வைத்து சிம்கார்டுகள் கொடுத்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, நிர்வாக வசதிக்கு அல்ல. தன் தாய், சகோதரர்கள் சென்னையில் இருப்பதால் வேலூருக்கு வந்து தன்னை பார்த்துச் செல்வதில் உள்ள கஷ்டங்களை அவர் மனுவில் தெரிவித்து இருந்தார். அரசு அதை பரிசீலனை செய்து இந்த முடிவு எடுத்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அல்லது நகரின் முக்கிய சாலை ஒரங்களில் சிறைகள் உள்ளதால், சாலைகளில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் சிறைக்குள் தூக்கி வீசப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், செல்போன்களின் புழக்கத்தைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செல்போன்களின் இயக்கத்தைச் செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தலாம் என முதலில் முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய சிறைகளில் கைதிகளின் வசதிக்காக பொது தொலைபேசி வைக்க அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். எவ்வளவு நேரம் பேசுவது என்ற காலவரம்பு நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் சிறைகளில் செல்போன் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com